வளைகுடா செய்திகள்

ஈத் அல் அதா: துல் ஹஜ் மாத பிறையை பார்க்குமாறு அழைப்பு விடுத்த சவூதி..!!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் வருவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்றன. இந்நிலையில் இந்த நாளை குறிக்கும் தேதியை உறுதிப்படுத்த இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்கக்கூடிய பிறையை ஞாயிற்றுக்கிழமை (18.6.23) அன்று பார்க்குமாறு  சவுதி அரேபியா அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை மாலை காணப்படலாம் என வானியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஒரு அறவிப்பில், நாட்டின் உச்ச நீதிமன்றம் பிறையை வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பார்க்கக்கூடிய அனைவரும் அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு அறிவித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளது. மேலும் அவர்கள் அருகில் உள்ள மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

“இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டக்கூடிய திறமை உள்ளவர்கள், இந்த நோக்கத்திற்காக பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதாக அரசு நடத்தும் சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) துல் ஹஜ் பிறையை பார்க்கவுள்ளதாக கூறியுள்ளது. பிறையைக் கண்டறிவது இந்த ஆண்டு ஈத் அல் அதா விடுமுறை நாட்களின் சரியான நாட்களைத் தீர்மானிக்கும்.

ஜூன் 18 ஞாயிற்றுக்கிழமை பிறை காணப்பட்டால் ஈத் அல் அதா ஜூன் 28 அன்றும் அல்லது பிறை ஜூன் 19 திங்கட்கிழமை காணப்பட்டால் ஈத் அல் அதா ஜூன் 29 அன்றும் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!