அமீரக செய்திகள்

துபாய்: மீண்டும் திறக்கப்பட்ட பார்க் மற்றும் நைட் பீச்..!! வானிலை சீராக மாறியதால் நடவடிக்கை..!!

துபாயில் நிலவி வந்த மோசமான வானிலையை முன்னிட்டு பொது பூங்காக்கள் மற்றும் இரவு கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழது அவை மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதை அடுத்து துபாய் முனிசிபாலிட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக இவற்றை தற்காலிகமாக மூடியது. துபாயில் வீசிய காற்று மற்றும் மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மேலும், அன்று 100 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளுக்கு துபாய் குடிமை அமைப்பு பதிலளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவற்றில்   குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்தது குறித்து 85 புகார்களுக்கு நகராட்சி ஊழியர்கள் பதிலளித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!