ADVERTISEMENT

இனி சவூதியில் C- டைப் சார்ஜர் மட்டுமே பயன்படுத்த முடியும்..!! 2025 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!

Published: 9 Aug 2023, 9:11 PM |
Updated: 9 Aug 2023, 9:11 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் வரும் ஜனவரி 1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2025 முதல் USB Type-C மட்டுமே தரப்படுத்தப்பட்ட இணைப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவுதி அரேபியாவின் தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையமானது, மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தினை சமர்ப்பித்தது. அதில் நாட்டில் உள்ள இணைப்பிகளைப் பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கூடுதல் செலவுகளைச் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் கொள்கைகளை ஆதரிப்பதோடு, உயர்தர தரவு பரிமாற்ற தொழில்நுட்பத்தை வழங்கவும் இது உதவியாக இருக்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவானது, ஆண்டுக்கு 2.2 மில்லியன் யூனிட்களுக்கு மேல் மொபைல் ஃபோன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை சார்ஜ் செய்யும் உள்நாட்டு நுகர்வு அளவைக் குறைப்பதற்கும், நாட்டில் உள்ள நுகர்வோரின் செலவினத்தை 170 மில்லியன் ரியாலுக்கும் அதிகமாக சேமிப்பதற்கும் பங்களிக்கும் என கூறப்படுகின்றது.

ஆண்டுதோறும் மின்னணு கழிவுகளை சுமார் 15 டன்கள் குறைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் நிலைத்தன்மைக்கான நாட்டின் இலக்குகளை அடையவும் இது உதவுகிறது.

ADVERTISEMENT

தீர்மானத்தின் கட்டாய அமலாக்கம் இரண்டு கட்டங்களில் நடைபெறும். இதன் முதல் கட்டம் ஜனவரி 1, 2025 இல் தொடங்கும் என்றும் இதில் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், இ-ரீடர்கள், போர்ட்டபிள் வீடியோ கேம் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள் மற்றும் கீபோர்டுகள் மற்றும் மவுஸ் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகின்றது. இரண்டாவது கட்டம் ஏப்ரல் 1, 2026 இல் தொடங்கும். இதில் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ரவுட்டர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவை அடங்கும் என கூறப்படுகின்றது.

எனவே, குறிப்பிட்ட விதிகள் படி 2025 ஆம் ஆண்டு முதல் சார்ஜிங் போர்ட்களின் வகைகளை USB Type-C ஆக தரநிலைப்படுத்த நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களை கட்டாயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகளை வகுப்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.