அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டு விடுமுறையில் பொதுப் பூங்காக்களின் செயல்பாட்டு நேரத்தை வெளியிட்ட துபாய் முனிசிபாலிட்டி!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் பலரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் 2025 ஆம் ஆண்டின் முதல் நாளை தங்களுக்கு அருகிலுள்ள பொது பூங்காக்கள் போன்ற வெளிப்புற இடங்களில் அனுபவிக்க திட்டுமிடுவார்கள்.

இதுபோன்ற பொது விடுமுறை நாட்களில் வெளிப்புற அனுபவத்தைத் தேடும் குடியிருப்பாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யவும் துபாய் முனிசிபாலிட்டி புதுப்பிக்கப்பட்ட பூங்கா செயல்பாட்டு நேரத்தை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், வருகின்ற ஜனவரி 1, 2025 புத்தாண்டு தினத்திற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொதுப் பூங்காக்களுக்கான செயல்பாட்டு நேரத்தை அதிகாரம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அல் மம்சார் பார்க், அல் கோர் பார்க், முஷ்ரிப் தேசிய பூங்கா, அல் சஃபா பார்க் ஆகியவை காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றும், இவற்றில் முஷ்ரிப் தேசிய பூங்காவில் உள்ள மவுண்டன் பைக் டிராக் மற்றும் மவுண்டன் வாக்கிங் டிரெயில் ஆகியவை காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜபீல் பூங்கா மற்றும் துபாய் பார்க்ஸ் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், லீம் ஏரி, அல் கதீர் ஏரி, அல் பர்ஷா பாண்ட் பூங்கா, உம் சுகீம் பூங்கா, அல் கசான் பூங்கா, அல் சத்வா பூங்கா மற்றும் அல் குஸ் 1st பூங்கா ஆகியவை புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும் என்று அதிகாரம் கூறியுள்ளது.

அத்துடன், அல் மர்மூம் ஏரிகள் (லவ், எக்ஸ்போ, சோலார் பவர் மற்றும் அல் ஹிலால்) மற்றும் சுஹைலா ஏரிகள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்றும் அதிகாரம் வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், குழந்தைகள் பூங்கா காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மேலும், குரானிக் பார்க் விடுமுறை நாளில், காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் எனவும் துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

இவை தவிர, கேவ் ஆஃப் மிராக்கில்ஸ் மற்றும் க்ளாஸ் ஹவுஸ் போன்ற சுற்றுலா இடங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாயின் சின்னமான அடையாளங்களில் ஒன்றான துபாய் ஃப்ரேம் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!