அமீரக செய்திகள்

அமீரகத்தில் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அலவன்ஸ்களை அதிகரிக்க கோரும் ஊழியர்கள்..!! ஆட்சேர்ப்பு நிபுணர்கள் தகவல்..!!

துபாய், ஷார்ஜா உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளின் வாடகை அதிகரிப்பு மற்றும் துபாயில் புதிய டோல் கேட்கள் அறிமுகம் போன்றவற்றின் காரணமாக, அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதலாளிகளிடம் தங்களின் வீட்டு வாடகை, போக்குவரத்து ஆகியவற்றிற்கான அலவன்ஸ்களை உயர்த்தி தர கோரிக்கை வைப்பதாக அமீரகத்தின் ஆட்சேர்ப்பு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அமீரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாடகைகள் அதிகரித்து வருகின்றன, மேலும் அதிகமான குடியிருப்பாளர்கள் உலகெங்கிலும் இருந்து அமீரகத்திற்கு படையெடுப்பதால் குடியிருப்பு இடத்திற்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளதாகவும், இதனால் சில பகுதிகளில் வாடகைகள் இரட்டிப்பாகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், துபாயின் டோல் ஆப்பரேட்டரான சாலிக் நிறுவனம் கடந்த நவம்பர் 2024இல் இரண்டு புதிய டோல் கேட்களை நிறுவியது, மேலும் அதன் 10 டோல் கேட்களிலும் பீக்ஹவர்ஸ் கட்டணம் 6 திர்ஹம்ஸ் மற்றும் அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அனுமதி வழங்கும் புதிய மாறுபட்ட விலையை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், பல ஊழியர்கள் தங்கள் செலவினங்களை நிர்வகிப்பதற்காகவும், குறிப்பாக தங்களுடைய வீட்டுக் கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது அடிப்படை வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அவர்களது சம்பளப் பேக்கேஜில் மாற்றங்களைச் செய்யுமாறும் தங்கள் முதலாளிகளை கோருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போக்குகளைக் கருத்தில் கொண்டு, முதலாளிகள் தங்கள் கொடுப்பனவு உத்திகளை மதிப்பீடு செய்து, போட்டித்தன்மையை நிலைநிறுத்தும்போது ஊழியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தக்க தீர்வுகளை வழங்கலாம் என்று ஆட்சேர்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வீடுகள், போக்குவரத்து மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் போன்ற விலை அதிகரிப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்களிடமிருந்து அதிக கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்

அவர்களின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் பல தொழில் வல்லுநர்களுக்கு சம்பளம் முன்னுரிமையாக உள்ளதாகவும், மருத்துவக் காப்பீடு, தொழில்முறை மேம்பாட்டுக் கொடுப்பனவுகள், நெகிழ்வான பணி ஏற்பாடுகள் மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவை அதற்கு முக்கிய காரணிகள் எனவும் கூறப்படுகிறது. எனவே ஊழியர்களின் தேவைகள் என்ன என்பது முதலாளிகளால் முழுமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஆட்சேர்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!