ADVERTISEMENT

சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!

Published: 29 Mar 2025, 7:20 PM |
Updated: 29 Mar 2025, 7:20 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் இன்று மாலை மார்ச் 29, சனிக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மார்ச் 30 (நாளை) ஈத் அல் ஃபித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களையும் சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரக அரசும் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel