இந்தியாவின் தொழில்துறை மற்றும் விநியோக அமைச்சர் திரு. பியூஷ் கோயல் (Piyush Goyal) அவர்கள், முன்னணி இந்திய கல்வி நிறுவனங்கள் துபாயில் தங்களது வளாகங்களைத் திறக்கும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். அவற்றில் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM-Indian Institute of Management) மற்றும் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT- Indian Institute of Foreign Trade) ஆகியவை அடங்கும், இது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஊடக நிகழ்வின் போது இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் கோயல், “துபாயில் விரைவில் ஒரு IIM இருக்கும், மேலும் துபாயில் IIFT ஐத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிறுவனங்கள் உலகளாவிய அங்கீகாரத்திற்காக அறியப்படுகின்றன, IIM கிளைகள் உலகளவில் சிறந்த 100 வணிகப் பள்ளிகளில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
1963 இல் நிறுவப்பட்ட IIFT, புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டது, இது ஒரு முன்னணி பொது வணிகப் பள்ளியாகும். தற்பொழுது துபாயிலும் திறக்கப்படவிருக்கும் இந்த வளாகங்களின் சரியான இடங்கள் மற்றும் தொடக்க தேதிகள் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT- Indian Institute of Technology) முதல் கிளை அபுதாபியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2024-2025 கல்வியாண்டில், IIT-டெல்லி அபுதாபி வளாகம் கணினி அறிவியல் (computer science) மற்றும் ஆற்றல் பொறியியலில் (energy engineering) இரண்டு இளங்கலைப் படிப்புகளை (bachelor degree) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துபாயில் இந்த சிறந்த இந்திய நிறுவனங்கள் நிறுவப்படுவது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வளர்ந்து வரும் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளைப் பிரதிபலிக்கிறது என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel