ADVERTISEMENT

UAE: கடும் வெயிலுக்கு அனைவருக்கும் இலவச மோர் வழங்கும் தமிழ் உணவகம்..!!

Published: 4 May 2025, 11:33 AM |
Updated: 4 May 2025, 11:37 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஷார்ஜாவில் உள்ள தமிழ் உணவகம் ஒன்று ஒரு அருமையான பாரம்பரியத்தை இந்த ஆண்டு மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஷார்ஜாவின் அபு ஷகாராவில் உள்ள மதுரை உணவகம் எனும் தமிழ் உணவகமானது ‘அனைவருக்கும் இலவச மோர்’ எனும் திட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாதசாரிகள் இங்கு இலவச மோரை பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

உணவக உரிமையாளரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிரபலமான முயற்சிக்கு, பொதுமக்களிடையே வரவேற்பு மிகவும் நேர்மறையானதாக இருந்ததால், நாங்கள் அதை மீண்டும் செய்ய முடிவு செய்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பாபு முருகன் கூறியுள்ளார். மேலும், அமீரகத்தில் வெப்பம் கடுமையாக உள்ளது, ஒரு கிளாஸ் குளிர்ந்த மோர் உண்மையில் வெயிலுக்கு நன்றாக உணர உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தென்னிந்தியா முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் புளிக்கவைக்கப்பட்ட பால் பானமான மோர், கொழுப்பு குறைவாகவும், எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியதாகவும் உள்ளது. இது நீரேற்றம் செய்கிறது, உடலை குளிர்விக்கிறது மற்றும் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். சர்க்கரை பானங்கள் அல்லது சோடாக்களை விடவும் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் பாதசாரிகளிடம் இலவச மோர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களால், சாலைகளில் மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்கள் தாகம் தணிப்பதற்காக பொது இடங்களில் வைக்கப்படும் தண்ணீர் குளிரூட்டிகள் போன்ற சமூக முயற்சிகளிலிருந்து தான் உத்வேகம் பெற்றதாகவும், எனவே நமது பாரம்பரிய மோரை இதுபோன்று நாமும் இலவசமாக வழங்கலாம் என முடிவு செய்து இந்த முயற்சியை தொடங்கியதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமீரகம் முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக பிற்பகல் நேரங்களில், நீரேற்றத்துடன் இருக்கவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. அத்துடன், வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு NCM   வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel