ADVERTISEMENT

அமீரகத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதியை கடுமையாக்கிய இந்தியா..!!

Published: 21 May 2025, 4:44 PM |
Updated: 21 May 2025, 4:44 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெட்டப்படாத, அரை உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் தூள் வடிவிலான தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவின் 2025 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், இந்தியா மற்றும் UAE இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் தங்க வர்த்தகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக, விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதிகள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் CEPA இன் கீழ் சுங்கவரி விகித ஒதுக்கீடு (TRQs) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் மேற்பார்வையை மேம்படுத்தவும் வர்த்தக கையாளுதலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, அமீ்ரகத்திலிருந்து இந்தியாவின் தங்க இறக்குமதி சமீபத்திய ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 2023 நிதியாண்டில் 3.5 பில்லியன் டாலரில் இருந்து 2024 நிதியாண்டில் 10.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்தியாவின் நிதி வல்லுநர்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஜித் குமார் பி.கே, இந்த புதிய கட்டுப்பாடுகளை கட்டமைக்கப்பட்ட மற்றும் இணக்கமான வர்த்தகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக விவரித்துள்ளார். மேலும் இந்தியாவின் இந்த முடிவு, துபாய் நல்ல விநியோக தரநிலை மற்றும் CEPA விதிமுறைகளுடன் ஒத்துப்போகும் வகையில், இருதரப்பு தங்க வர்த்தகம் மிகவும் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த புதிய விதிகள் தங்க சந்தையில் துபாய்க்கு சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். துபாய் மல்டி கமாடிடிஸ் சென்டரின் (DMCC) படி உலகளாவிய இயற்பியல் தங்க வர்த்தகத்தில் சுமார் 25% கையாளும் துபாய், இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பங்கை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இந்த மாற்றங்களின் உடனடி தாக்கம், இறக்குமதிகளில் மந்தநிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் மற்றும் அமைப்புகளுடன் ஒத்துப்போக இந்திய இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் காலம் தேவைப்படும் என்பது இதற்கு காரணமாக வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel