ADVERTISEMENT

“அண்டை நாடுகளின் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் தொடரும்”.. ஈரான் உச்ச தலைவரின் முதல் அறிக்கை..

Published: 12 Mar 2026, 7:08 PM |
Updated: 12 Mar 2026, 7:50 PM |
Posted By: admin

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக பதவி நியமனம் செய்ததன் பிறகு அவரது முதல் அறிக்கை அரசு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தொகுப்பாளரால் வாசிக்கப்பட்டது. அதில் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு ஈரானின் தாக்குதல்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. கமேனி கேமராவில் தோன்றவில்லை, மேலும் இஸ்ரேலிய மதிப்பீட்டின்படி, இந்த போரின் ஆரம்ப கட்ட தாக்குதலில் அவர் காயமடைந்தார் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட இறப்புகளுக்குப் பழிவாங்குவதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வியாழக்கிழமை சபதம் செய்ததுடன், அது அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

“இந்த பழிவாங்கலின் ஒரு குறிப்பிட்ட அளவு இதுவரை உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது, ஆனால் அது முழுமையாக அடையப்படும் வரை, இது எங்கள் முன்னுரிமைகளில் ஒன்றாகவே இருக்கும்” என்று கமேனி அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், லெபனான், ஈராக் மற்றும் ஏமன் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள தெஹ்ரானின் நட்பு ஆயுதக் குழுக்களுக்கு காமெனி நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் “முன்னணி போராளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று காமெனி அரசு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தொகுப்பாளர் வாசித்த அறிக்கையில், ஏமனில் உள்ள ஹவுத்திகள், லெபனானின் ஹெஸ்பொல்லா குழு மற்றும் ஈராக்கில் உள்ள நட்பு குழுக்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரானின் இந்த யுக்தியால் அரேபிய வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரானின் இடைவிடாத தாக்குதல்களினால் வியாழக்கிழமை எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 (Dh367) க்கு மேல் உயர்ந்தது.

பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானில் செயல்பட்டு வந்த பள்ளியின் மீது ஏவுகணைகளை தாக்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வரும் பட்சத்தில் மற்றொரு தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறும் வரை அதன் தாக்குதல்கள் தொடரும் என்று ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார். இது போர்நிறுத்தம் அல்லது அமெரிக்காவின் போர் வெற்றி குறித்த அறிவிப்பு என எந்தவொரு செயலும் மோதலை நிறுத்தாது என்பதைக் குறிக்கிறது.

அத்துடன் ஈரானில் நடந்து வரும் போரினால் 3.2 மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் தெஹ்ரான் மற்றும் நாட்டின் வடக்கு அல்லது கிராமப்புறங்களை நோக்கி உள்ள பிற முக்கிய நகரங்களிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளது. லெபனானில் குறைந்தது 759,000 பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பல நாடுகள் போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் போர் முடிவுக்கு வர, உலகம் ஈரானின் “சட்டபூர்வமான உரிமைகளை” அங்கீகரிக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் எதிர்கால தாக்குதல்களுக்கு எதிராக உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் வியாழக்கிழமை ஆன்லைனில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள அமெரிக்க தளங்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல், அரேபிய வளைகுடாவிலிருந்து இந்தியப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் நீர்வழியான ஹார்முஸ் நீரினை பாதையும் மூடப்பட்டிருக்கும் என ஈரான் கூறியுள்ளது.

நீரிணையில் போக்குவரத்து திறம்பட நிறுத்தப்பட்டதால், சர்வதேச தரநிலையான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, பீப்பாய்க்கு 9 சதவீதம் உயர்ந்து 100 டாலருக்கும் அதிகமாக இருந்தது, இது போர் தொடங்கியபோது அதன் விலையை விட சுமார் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்திய நாட்களில் விலைகள் முன்னும் பின்னுமாக மாறிவிட்டன, ஒரு கட்டத்தில் பீப்பாய்க்கு 120 டாலராக உயர்ந்தது.

அதே நேரத்தில் ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளின் மீது நடத்திய சமீபத்திய தாக்குதல்கள் புதன்கிழமை அங்கீகரிக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறியது என கூறப்பட்டுள்ளது

ஈரானிய தாக்குதலால் பஹ்ரைனின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள முஹாரக் தீவில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஈரானிய ஆளில்லா விமானம் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர் என்றும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

துபாய் நகரத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஐக்கிய அரபு அமீரகம் வான் பாதுகாப்புகளை செயல்படுத்தியதாகவும், ட்ரோன் தாக்கிய பின்னர் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சவுதி அரேபியா, அதன் தலைநகரான ரியாத்தில் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளது.

புதன்கிழமை ஈராக்கின் பாஸ்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை நாட்டின் அனைத்து எண்ணெய் முனையங்களிலும் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு அமெரிக்க,இஸ்ரேல் ஆரம்பித்த போரானது முடிவு எப்போது வரும் என்பது தெரியாமல் மத்திய கிழக்கு முழுவதும் அமைதியை சீர்குலைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.