கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக நீடித்து வரும் பிராந்தியப் போரில் ஈரான் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டியை (fuel tank) ட்ரோன் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, சேதம் பொருள் இழப்புகளுடன் மட்டுமே உள்ளது என்றும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி குவைத் செய்தி நிறுவனத்திடம் (KUNA) கூறினார்.
தீயணைப்புக் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த உடனடியாக அவசரகால நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்தைப் பாதுகாக்கவும், சேதத்தின் முழு அளவை மதிப்பிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.