துபாயில் உள்ள அதிகாரிகள், தாக்குதலை வெற்றிகரமாக இடைமறிக்கும் சம்பவத்தின் போது நகர மையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகப்பில் சிறிய சேதத்தை ஏற்படுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் தற்போதைய பாதுகாப்பு கண்காணிப்பின் ஒரு பகுதியாக இது விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் துபாய் ஊடக அலுவலகம், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அவசர மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக செயல்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நேற்று (வியாழக்கிழமை) இது போன்ற சிறிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் எந்த காயங்களும் பதிவாகவில்லை. சிவில் பாதுகாப்பு குழுக்கள் விரைவாக ஒவ்வொரு சூழ்நிலையையும் நிர்வகித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
நேற்றைய சம்பவங்கள்:
ஷேக் சயீத் சாலை கட்டிடம்: வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்பிலிருந்து உடைந்த பாகங்கள் ஒரு கட்டிட முகப்பில் விழுந்தது.
அல் பதா : ஒரு சிறிய ட்ரோன் விபத்து பதிவாகி நிலைமை மதிப்பிடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.
துபாய் க்ரீக் ஹார்பர் கட்டிட தீ: ஒரு கட்டிடத்தின் மீது ஒரு ட்ரோன் விழுந்ததால், ஏற்பட்ட சிறிய தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.