ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள எட்டிசலாத் பேருந்து நிலையம் மற்றும் ஷார்ஜாவில் உள்ள முவைலே இடையே இயக்கப்படும் 315 பேருந்து சேவை சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
மேலும் பேருந்து சேவைகள் படிப்படியாக முழு கொள்ளளவுக்குத் திரும்புவதால், சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் நம்பகமான பயணங்களை உறுதி செய்வதற்காக, தேவையான அனைத்து செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளதாக RTA உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும்போது, பயணிகள் கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கவும், அதிகாரப்பூர்வ RTA சேனல்கள் மூலம் புதுப்பிப்புகளைப் பெறவும், மற்றும் நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஷார்ஜா மற்றும் அஜ்மானுக்கான பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று RTA மார்ச் 26 அன்று முன்னதாகவே எச்சரித்திருந்தது. அதில் அமீரகம் முழுவதும் பல சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதாகவும், ஷார்ஜாவில் உள்ள சில முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.