ADVERTISEMENT

வரலாற்று பகுதிகள், மெட்ரோ, போக்குவரத்து நெட்வொர்க்கை இணைக்கும் துபாயின் மாஸ்டர் பிளான் ‘Dubai Walk‘ .. RTA வெளியிட்ட அறிவிப்பு

Published: 22 Mar 2026, 6:49 PM |
Updated: 22 Mar 2026, 6:49 PM |
Posted By: admin

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்பொழுது புதிய ஒரு திட்டம் ஆரம்பமாகியுள்ளது. உலகின் மிகவும் நடந்து செல்லக்கூடிய நகரங்களில் ஒன்றாக மாறும் தனது தொலைநோக்குப் பார்வையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது விரிவான ‘துபாய் வாக் மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் முதல் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சியின் மூலம், 2040-ஆம் ஆண்டுக்குள் துபாய் முழுவதும் 6,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நடைபாதைகள் அமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அல் ராஸில் துபாய் வாக் மாஸ்டர் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளையும் இணைக்கும் 12 கி.மீ நீளமுள்ள பாதசாரிகள் நடைபாதை உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இந்தத் திட்டத்தில் 5 கி.மீ நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் அடங்கும் என்றும் மேலும், இது அல் ஃபஹிதி கோட்டை (Al Fahidi Fort), அல் ஷிந்தகா வரலாற்று மாவட்டம் (Al Shindagha Historic District) மற்றும் அல் அஹ்மதியா பள்ளி (Al Ahmadiya School) போன்ற முக்கிய பாரம்பரியச் சின்னங்களை இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் இணைப்பை மேம்படுத்துவதற்காக 11 மெட்ரோ, பேருந்து மற்றும் கடல்வழிப் போக்குவரத்து நிலையங்களுடன் இது ஒருங்கிணைக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTA-வின் கூற்றுப்படி, துபாயை பாதசாரிகளுக்கு உகந்த நகரமாக மாற்றுவதற்கும், அமீரகத்தின் நீண்டகால நகர்ப்புறப் போக்குவரத்து இலக்குகளை ஆதரிப்பதற்கும் ஆன ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முயற்சியானது, துபாய் நகர்ப்புறத் திட்டம் 2040-உடன் ஒத்துப்போகிறது. இத்திட்டத்தின் நோக்கம், குடியிருப்பாளர்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான அத்தியாவசிய சேவைகளை 20 நிமிடப் பயணத்திற்குள் அணுகுவதை சாத்தியமாக்குவதாகும்.

RTA-வின் பொது இயக்குநரும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் டாயர், பாதசாரிகளுக்கான இந்த பெருந்திட்டம், நடைபாதை உள்கட்டமைப்பில் துபாயின் உலகளாவிய போட்டித்திறனை வலுப்படுத்தும் என்றும், அமீரகத்தின் ‘வாழ்க்கைத் தர உத்தி 2033’-க்கு ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் “இந்தத் திட்டம் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. வெவ்வேறு பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துகிறது, மேலும் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரக் கூறுகளைப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது,” என்று அல் டாயர் கூறியுள்ளார்.

அல் ராஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாய் கலாச்சாரம் மற்றும் கலைகள் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து, அமீரக மற்றும் உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்புடன் 10 கலை இடங்கள் புனரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் பாரம்பரியத்தையும் கலாச்சார அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் மேம்பட்ட விளக்குகள் இந்த இடங்களில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதசாரிகளுக்கான பாதைகளை அகலப்படுத்துதல், நிழல் தரும் பகுதிகள், இருக்கை மண்டலங்கள் மற்றும் பசுமை இடங்களைச் சேர்ப்பது, அத்துடன் மாவட்டத்தின் வரலாற்றுத் தன்மைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வழி கண்டறியும் அமைப்புகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

விரிவான துபாய் வாக் மாஸ்டர் திட்டத்தின்படி, 2040-ஆம் ஆண்டுக்குள் 160 பகுதிகளில் 6,000 கி.மீ-க்கும் அதிகமான நடைபாதைகள் உருவாக்கப்படும். அத்துடன், அமீரகம் முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்காக 110 பாதசாரி பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளும் கட்டப்படும்.

ஒருங்கிணைந்த, அணுகக்கூடிய மற்றும் பாதசாரிகளுக்கு உகந்த உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நடைப்பயணம் மற்றும் மென்மையான பயணங்களின் பங்கை 2025-ல் 16 சதவீதத்திலிருந்து 2040-க்குள் 25 சதவீதமாக உயர்த்துவதை RTA நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாஸ்டர் திட்டத்தின் முதல் கட்டம் 2025 மற்றும் 2027-க்கு இடையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்த கட்டங்கள் 2040 வரை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.