வான் பாதுகாப்பு இடைமறிப்புகளின் போது விழுந்த சிதறல்களால் சேதமடைந்த ஏழு மின்கம்பிகளை (transmission line) குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MEW) செயலிழக்கச் செய்துள்ளது என்று அரசு செய்தி நிறுவனமான KUNA தெரிவித்துள்ளது.
மேலும் இந்தச் சம்பவத்தால் நாட்டின் பல பகுதிகளில் பகுதியளவு மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பொறியாளர் பாத்திமா ஜவ்ஹர் ஹயாத் கூறியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தளங்கள் பாதுகாக்கப்பட்டவுடன், பழுதுபார்க்கும் குழுக்கள் பணிகளைத் தொடங்க உள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்பொழுதுள்ள மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முழுமையான சேத மதிப்பீடு திட்டமிடப்பட்டுள்ளது என்றும்
பாதுகாப்பான மற்றும் திறமையான மின் மீட்டெடுப்பை உறுதி செய்வதற்காக களக் குழுக்கள் முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு இடையூறுகளையும் சரிசெய்யவும், தேசிய மின் விநியோகத்தின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் அவசரகாலக் குழுக்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ தகவல்களை நம்புமாறும், நிலைமை மாறும்போது புதிய தகவல்களுக்காகக் காத்திருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.