குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று காலை ஈரான் நடத்திய தாக்குதலில் பல அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாரிகள் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர் என்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பராமரிப்புக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் நிலை சீராக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இன்று காலை குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவங்களின் சூழ்நிலைகள் குறித்து அமெரிக்கப் படைகளுடன் நேரடி ஒருங்கிணைப்பு நடத்தப்பட்டதாகவும், கூட்டு தொழில்நுட்ப நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.
இன்று காலையில் சிறிய, எண்ணெய் வளம் மிக்க குவைத் நாட்டை குறிவைத்து வந்த குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான ட்ரோன்களை குவைத்தின் உள்துறை அமைச்சகம் இடைமறித்ததாகக் கூறியது.
மேலும் சம்பவங்களுக்கான காரணங்களைத் தீர்மானிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களும் ஊடகங்களும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில்i இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானிய தாக்குதல்களின் சமீபத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நகரில் மீது சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஈரானிய தாக்குதல்களில் குவைத்தில் ஒருவர் உட்பட இதுவரை வளைகுடாவில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.