அமெரிக்க-ஈரான் முதல் காரணமாக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பதற்றம் நிலவி வருவதற்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இந்த அழைப்பின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பல சகோதர நாடுகள் மீது ஈரான் நடத்திய வெளிப்படையான தாக்குதல்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான அவற்றின் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்து, அவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான அமெரிக்க மோதல்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்கள், வளைகுடாவில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடத்திலும் விழுந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்ததால் துபாய் மற்றும் அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்து பலத்த சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன.
ஈரானின் தாக்குதல்கள் வளைகுடா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், இராணுவ நிறுவல்கள், துறைமுகங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்தன. இந்த தாக்குதல்களில் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையம் இரண்டும் சேதமடைந்தன, இரண்டு இடங்களிலும் தலா ஒருவர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.