சமூக ஊடக தளங்கள் அல்லது வேறு எந்த தொழில்நுட்ப வழிமுறைகள் மூலமாகவும் தெரியாத மூலங்களிலிருந்து வரும் வதந்திகள் மற்றும் தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பரப்புவதற்கு எதிராக பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது . ஏனெனில், இது குழப்பம் பரவுதல் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல் போன்ற விளைவுகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு சமூக ஊடகப் பதிவில், அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுவதன் அவசியத்தையும், சரிபார்ப்பு இல்லாமல் வெளியிடப்பட்ட அல்லது பரப்பப்படும் தகவல்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதையும் பொது வழக்கு துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தெரியாத மூலங்களிலிருந்து தகவலை பகிரும் அல்லது மறுபதிவு செய்யும் எந்தவொரு நபரும், அசல் படைப்பாளராக இல்லாவிட்டாலும் கூட, பொருந்தக்கூடிய சட்டத்தின்படி சட்டப்பூர்வ பொறுப்புக்கு உட்பட்டவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல் என்பது ஒரு பொறுப்பு, மேலும் வதந்திகளைப் பரப்புவது ஒரு குற்றமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.