அமீரகத்தில் இன்று (ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை), ஷார்ஜாவில் உள்ள துரையா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான நிர்வாகக் கட்டிடம் மீது ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஷார்ஜா அதிகாரிகள் பதிலளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா அரசாங்க ஊடக அலுவலகத்தின் படி, இந்தச் சம்பவத்தில் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.
இதற்கிடையில், இன்று (ஏப்ரல்7) ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 11 ஆளில்லா வான்வழி வாகனங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.