ADVERTISEMENT

UAE: பிரம்மிக்க வைக்கும் துபாயின் மக்கள்தொகை வளர்ச்சி.. அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட அரசு ஊடக அலுவலகம்..!

Published: 2 Aug 2022, 1:52 PM |
Updated: 2 Aug 2022, 1:52 PM |
Posted By: admin

துபாயில் 1950 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 165 மடங்கு மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக துபாய் மீடியா அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டு மக்கள்தொகை 3.3 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2040-ஆம் ஆண்டு 5.8 மில்லியனை எண்ணிக்கையை எட்டும் ஏன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, 1950 மற்றும் 2020-க்கும் இடையில் மக்கள்தொகை 165 மடங்கு அதிகரித்துருக்கிறது, 1950 ஆம் ஆண்டு 20,000 ஆக இருந்த மக்கள் தொகை, 1960-இல் 40,000-ஐ எட்டியது. 1970இல் துபாயின் மக்கள்தொகை 73,000-ஐ எட்டியது, 1980 இல் எண்ணிக்கை 254,000-ஐ எட்டியது. 1990 ஆம் ஆண்டில் மக்கள்தொகை 473,000வும், 2000-இல் 907,000 ஆகவும் இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் 1.8 மில்லியனை எட்டியது.

இந்த மக்கள்தொகை அதிகரிப்புக்கு துபாய் வழங்கும் வாய்ப்புகள் காரணம் என்றும் 2040-இல் எண்ணிக்கை 5.8 மில்லியனை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT