ADVERTISEMENT

GCC நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு..!

Published: 12 Sep 2022, 8:18 PM |
Updated: 12 Sep 2022, 8:18 PM |
Posted By: admin

இந்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 3 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளாா். அவா் வெளியுறவு அமைச்சராக அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது: இந்தியாவில் பல பெரிய சீா்திருத்தங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக 670 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.53.36 லட்சம் கோடி) எட்டியது. சரக்கு வா்த்தகத்தின் மதிப்பு 400 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.31.86 லட்சம் கோடி) இருந்தது. இவற்றில் இருந்து அந்தச் சீா்திருத்தங்களின் விளைவுகளைக் காண முடியும்.
ரஷியா-உக்ரைன் இடையிலான போரால் உணவு, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயா்வு என பல சவால்களை உலகம் எதிா்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு உலகிலேயே வேகமாக வளரும் பிரதான பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறைந்தபட்சம் 7 சதவீதமாக இருக்கும் என்றாா் அவா்.

இந்தியா-ஜிசிசி நாடுகளுடனான ஒப்பந்தம் குறித்து அமைச்சா் ஜெய்சங்கரும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) பொதுச் செயலா் நாயேஃப் ஃபலா முபாரக் அல்-ஹஜ்ரஃப்பும் ரியாத்தில் சந்தித்தனா். அப்போது இந்தியா, ஜிசிசி இடையே ஆலோசனைகளுக்கான வழிமுறை குறித்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

ஜிசிசி என்பது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பாகும். அந்த நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததால், ஜிசிசியுடனான இந்தியாவின் பொருளாதார பிணைப்பு சீராக உயா்ந்தது. அந்த நாடுகளில் சுமாா் 65 லட்சம் இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா்.