ADVERTISEMENT

துபாய்: டிராம் டிராக்குகளுக்கு அருகில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம்..!! RTA எச்சரிக்கை..!!

Published: 7 Oct 2022, 10:39 AM |
Updated: 7 Oct 2022, 10:44 AM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் நகரின் டிராம் தண்டவாளங்களுக்கு அருகில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், துபாய் டிராம் பாதையில் பொறுப்பற்ற முறையில் நுழைந்தால் அல்லது அதன் வழியாக ஓட்டினால் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வீடியோவை ஆணையம் பகிர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இது ஆபத்தை ஏற்படுத்தலாம் அல்லது வாகனத்தின் சேவைகளில் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என RTA எச்சரித்துள்ளது. மேலும் உங்கள் பாதுகாப்பை ஒருபோதும் பணயம் வைக்காதீர்கள் எனவும் வாகன ஓட்டிகளை RTA கேட்டுக்கொண்டுள்ளது.