1,530 சிறை கைதிகளை மன்னித்து விடுதலை வழங்க அமீரக ஜனாதிபதி உத்தரவு..!! தேசிய தினத்தை முன்னிட்டு நடவடிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தினத்தை முன்னிட்டு 1,530 கைதிகளை விடுவிக்க அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கைதிகள் வெவ்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும், மன்னிக்கப்பட்ட கைதிகளின் நிதிக் கடமைகளைத் தீர்ப்பதாகவும் ஷேக் முகமது அவர்கள் உறுதியளித்துள்ளார். இந்த முயற்சி, கைதிகள் புதிதாக தங்களது வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், அமீரகத்தின் ஆட்சியாளர்கள் நூற்றுக்கணக்கான கைதிகளை மன்னித்து விடுதலை அளித்து வருகிறார்கள். இந்த செயலானது குடும்பங்களை ஒன்றாக வைத்திருக்கவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முயல்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.