தொடர்ந்து எட்டாவது நாளாக ஈரான் மற்றும் US, இஸ்ரேல் இடையே போர் நீடிக்கும் நிலையில் ஈரான் அமீரகத்திற்கு ஏவிய ஏவுகணைகளை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து வருகின்றது. இந்த இடைமறிப்பின் போது இன்று ஏவுகணையின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததால் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாகவும் அது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த சம்பவங்களால் எந்த காயங்களும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் துபாய் விமான நிலையத்தில் தாக்குதல் தொடர்பான எந்த சம்பவங்களும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சம்பவங்களை பரிந்துரைத்து ஆன்லைனில் பரவும் அறிக்கைகளை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் துல்லியமான தகவல் மற்றும் புதுப்பிப்புகளுக்கு குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகள் அதிகாரப்பூர்வ சேனல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.