ADVERTISEMENT

அபுதாபியில் வாகனத்தின் மேல் ஏவுகணை விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..

Published: 16 Mar 2026, 11:02 AM |
Updated: 16 Mar 2026, 11:28 AM |
Posted By: admin

US,இஸ்ரேல்-ஈரான் இடையே 17வது நாளாக போர் நீடிக்கும் நிலையில் ஈரான் வளைகுடா நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் அபுதாபியில் வாகனம் மீது ஏவுகணை விழுந்ததில் இன்று (மார்ச் 16) ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் அல் பஹ்யா பகுதியில் ஒரு வாகனம் மீது ஏவுகணை விழுந்தததால், ஒரு பாலஸ்தீனிய நாட்டவர் உயிரிழந்ததாக அபுதாபி அறிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகிலுள்ள எரிபொருள் டேங்கர்கள் ஒன்றில் ட்ரோன் சம்பந்தமான தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, விமானங்கள் தற்காலிகமாக இன்று காலையில் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.