இந்திய செய்திகள்

இந்தியாவிற்கு பயணம் செய்வது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! பதிவு செய்ய ஆன்லைன் லிங்க்கும் வெளியீடு..!!

வெளிநாடுகளில் இருந்து தற்போது திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா செல்லும் பயணிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிமுறைகளை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் (Ministry of Health & Family Welfare – MoHFW) ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியிட்டிருந்தது. மேலும் அந்த புதிய வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், அது வரையிலும் பழைய வழிகாட்டுதல்களே பின்பற்றப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள், பயணத்திற்கு முன்பு சுய அறிவிப்பு படிவத்தை (Self Declaration Form) ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் எனவும், மேலும் கொரோனாவிற்கான சோதனை முடிவில் பெறப்படும் நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பவர்கள் கட்டாய ஏழு நாள் கட்டண தனிமைப்படுத்தலில் (7 Days Institutional Quarantine) இருந்து விலக்கு கோர இந்த ஆன்லைன் போரட்டலில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் குறித்து, துணை தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யக்கூடிய பயணிகள், தங்களின் சுய அறிவிப்பு படிவம் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான தகவல்களை சோதனை மையங்களில் வழங்குவதற்கு ஆக கூடிய நேரத்தை தவிர்ப்பதற்காக, அவர்கள் அனைவரும் www.newdelhiairport.in எனும் இணையதளத்தில் AIR SUWIDHA வில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு நேரடியாக பயணிகளின் தகவல்களை www.newdelhiairport.in/airsuvidha/apho-registration எனும் இந்த லிங்க் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யாமல் இந்தியாவிற்கு பயணிப்பவர்களின் சுய அறிவிப்பு படிவம் மற்றும் பயணிகளின் தகவல்கள் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி வரையிலும் விமான நிலையத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் எனவும், ஆகஸ்ட் 11 ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள் தங்களின் நடைமுறைகளை விரைவில் முடிப்பதற்கும், காலதாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்பவர்கள், தங்களின் பாஸ்போர்ட் தகவல்கள், இந்திய முகவரி, இந்திய தொலைபேசி எண், பயண விபரங்கள் உள்ளிட்ட தகவல்களையும், மேலும் ஏழு நாள் கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோர விரும்புபவர்கள், 96 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட COVID-19 நெகடிவ் ரிசல்ட்டை ஆன்லைன் போரட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பதிவு செய்தவர்களின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட படிவத்தின் நகலுடன், தனித்துவமான ரெஃபரென்ஸ் நம்பர் (unique reference number) ஒன்று அனுப்பப்படும் எனவும், இந்தியாவிற்கு வரும் பயணிகள் அதனை பிரிண்ட் எடுக்கப்பட்ட நகலாகவோ அல்லது தங்களின் மொபைல் போன் மூலமாகவோ ஏர்போர்ட் ஹெல்த் ஆபீஸ் கவுண்டரில் காட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளது. பயணிகளின் விபரம் ஏர்போர்ட் ஹெல்த் ஆபீஸ் கவுண்டரில் சரிபார்க்கப்பட்டு ஸ்டாம்ப் செய்யப்பட்ட பின்னரே பயணிகள் இம்மிகிரேஷன் செயல்முறைகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!