அமீரக செய்திகள்

துபாய்: வாகனத்தில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீ.. முழுபாகமும் தீக்கிரையாகிய அவலம்..!!

துபாயின் அல் கூஸ் 1 பகுதியில் உள்ள சாலையில் வியாழக்கிழமை (இன்று) மாலை வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் வாகனத்தின் முழு பாகமும் தீக்கிரையாகி உள்ளது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக சிவில் பாதுகாப்புத் துறையில் இருந்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தன.

இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் ஒரு சர்வீஸ் ரோடில் நடந்த காரணத்தினால் போக்குவரத்தை இது பாதிக்கவில்லை.

விபத்து நிகழ்ந்ததை அடுத்து, விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!