ADVERTISEMENT

டாக்ஸியில் 4 பேர் வரை பயணிக்கலாம்.. ஷாப்பிங் மால்களில் 80 சதவிகிதத்தினருக்கு அனுமதி..!! கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்த அபுதாபி..!!

Published: 15 Aug 2021, 6:55 AM |
Updated: 15 Aug 2021, 8:44 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே அபுதாபியின் பெரும்பாலான பொது இடங்களில் நுழைய முடியும் என்ற அறிவிப்பை முன்னிட்டு ஆகஸ்ட் 20 முதல் ஷாப்பிங் மால், சினிமா உள்ளிட்ட இடங்களுக்கான மக்களின் திறனானது அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள்

> ஷாப்பிங் மால்களில் 40 சதவீத திறன் அடிப்படையில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதமாக இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

> சினிமாக்கள் தற்போதைய 30 சதவீதத்திறனில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

> அதேபோல், பொழுதுபோக்கு மையங்கள், கலாச்சார மையங்கள், அருங்காட்சியகங்கள் 80 சதவிகிதத்தில் செயல்பட முடியும்.

> கூடுதலாக, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் 80 சதவீதம் வரை வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கலாம். ஒரு மேஜையில் 10 பேர் அமரலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் உணவருந்தாதபோது முகக்கவசம் அணிய வேண்டும்.

ADVERTISEMENT

> சமூகம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பெருநிறுவன நிகழ்வுகளின் திறன் வரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

> இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்கள், நிகழ்வு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவைக் காட்ட வேண்டும்.

> மேலும், பொது போக்குவரத்து 75 சதவீத பயணிகள் திறனுடன் செயல்பட முடியும். பொதுப் பேருந்துகள் தற்போது 50 சதவீதத்தில் இயங்குகி வருகின்றன.

> அதே போல் ஒரு டாக்ஸி டிரைவர் 5 பேர் கொண்ட டாக்ஸியில் 3 பயணிகளுடனும், 7 பேர் கொண்ட டாக்ஸியில் 4 பயணிகளுடனும் பயணம் செய்யலாம்.

> சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் போன்ற பெருநிறுவன நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள் 60 சதவிகிதத் திறனில் இயங்கலாம். மேலும், திருமண மண்டபங்களில் விருந்தினர்களுக்கு 60 சதவிகிதம் வரை அனுமதி உண்டு.

> இருப்பினும், அதிகபட்சம் 100 பேர் மட்டுமே மண்டபத்தில் இருக்க முடியும். இந்த நிகழ்வுகளை நடத்தும் அனைத்து பொது இடங்களுக்கும் நுழைய கிரீன் பாஸ் முறையைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிகழ்வு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை மக்கள் காட்ட வேண்டும்.

> சுகாதார கிளப்புகள், விளையாட்டு அகாடமிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஸ்பாக்களின் செயல்பாட்டு திறன் 50 சதவீதமாக இருக்கும். 

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவால் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரவுள்ள ‘கிரீன் பாஸ்’ அமைப்பு தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மற்றொரு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று கூறியுள்ளது.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும், அனைத்து சமூக உறுப்பினர்களும் தனியார் நிகழ்வுகள் மற்றும் குடும்பக் நிகழ்வுகளில் கிரீன் பாஸ் முறையை அமல்படுத்த குழு ஊக்குவிக்கிறது.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து தனிநபர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.