Uncategorized

அபுதாபி விசாவில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு..?? அபுதாபி வந்தடைந்த இந்திய பயணிகள் கூறுவது என்ன..??

அமீரக அரசால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் பிறகு இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களிலிருந்து இன்று முதல் விமான பயண சேவையை தொடங்குவதாக எதிஹாட் ஏர்வேஸ் நேற்று அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களான சென்னை, பெங்களூரு, கொச்சி, புது டெல்லி மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானம் இன்று சனிக்கிழமை தனது சேவைகளைத் தொடங்கியதால் இந்தியாவில் சிக்கித்தவித்த நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் அபுதாபிக்கு திரும்பியுள்ளனர்.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு பயணி தங்களின் பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வரவேற்க அபுதாபி விமான நிலையத்தில் காத்திருந்த சுந்தரேசன் என்பவர் கூறுகையில்,

“நான் டிஸ்கவரி கார்டனில் தங்கியிருக்கிறேன், நான் எனது குடும்ப உறுப்பினர்கள் அமீரகம் திரும்பி வர ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஃப்ளைதுபாய் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவற்றில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். பின்னர் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஃப்ளைதுபாய் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அபுதாபி விசா உள்ளவர்களை அனுமதிக்கவில்லை. எனவே இன்று காலை 8 மணிக்கு, நான் எதிஹாத் விமானத்தில் முன்பதிவு செய்தேன். இறுதியாக எனது குடும்பத்தினர் இன்று அமீரகத்தை வந்தடைந்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.

எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய இரண்டும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா வைத்திருக்கும் பயணிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.

எனினும் ஒருவர் குறிப்பிட்ட எமிரேட்டில் வசிப்பவராக இருந்தால் அந்த விமானத்தில் மட்டுமே பயணிக்க முடியும் என்றோ, அல்லது அந்த குறிப்பிட்ட எமிரேட் விசா வைத்திருக்க வேண்டும் என்றோ என்று இரு விமான நிறுவனங்களும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அபுதாபி வழியாக துபாயில் திரும்பியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று சுதர்சனின் மனைவி மீன்காஷி தெரிவித்துள்ளார்.

மேலும் அபுதாபியில் இருந்து விமான நிலைய டாக்ஸியில் பயணம் செய்து துபாயில் உள்ள தனது வீட்டை அடைந்த பிறகு அபுதாபி அரசு அறிவித்திருந்த 10 நாள் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாங்கள் அபுதாபி விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை எடுத்து முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். நான் சோதனையில் எதிர்மறை முடிவை பெற்றால் நாங்கள் தனிமைப்படுத்த தேவையில்லை. ஏனெனில் நாங்கள் அபுதாபியில் இருந்து வெளியேற விமான நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் டாக்ஸியில் கட்டாயமாக பயணிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியில் தரையிறங்கும் துபாய், ஷார்ஜா போன்ற பிற எமிரேட் சார்ந்த பயணிகள் விமான நிலைய டாக்ஸி, எதிஹாத் விமான நிறுவன ஓட்டுநர் அல்லது எத்திஹாட் விரைவு கோச்சில் மட்டுமே மற்றொரு எமிரேட் செல்ல முடியும் என்றும், அவ்வாறு செல்பவர்களுக்கு தனிமைப்படுத்தபட வேண்டிய அவசியமில்லை என்றும் எதிஹாத் ஹெல்ப் சென்டரில் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!