அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 329 பேருக்கு கொரோனா தொற்று..!!
அமீரகத்தில் கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பானது கடந்த சில நாட்களாகவே மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை, செப்டம்பர் 23, 2021) புதிதாக 329 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 733,972 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,083 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில் மட்டும் 401 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 726,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.