ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு 870 கைதிகளை விடுதலை செய்ய அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கைதிகளுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அவர்களின் குடும்பங்களின் துன்பங்களை எளிதாக்குவதற்கும் ஜனாதிபதி மாண்புமிகு கலீஃபா அவர்களின் ஆர்வத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கடன்கள் மற்றும் அபராதங்களும் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.