துபாய்: இன்று இரவில் வானத்தை அலங்கரிக்கப் போகும் ஸ்கைடைவர்ஸ்.. பார்வையாளர்கள் எங்கே பார்க்கலாம்..??

துபாயில் பிரசித்தி பெற்ற துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 30-வது பதிப்பு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ட்ரோன்கள், வானவேடிக்கைகள் மற்றும் நடனமாடும் ஸ்கைடைவர்கள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி இன்றிரவு (டிசம்பர் 13) வானத்தை ஒளியூட்ட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள ப்ளூவாட்டர்ஸ் மற்றும் தி பீச், JBR பகுதியில் பைரோ ட்ரோன்கள் நிகழ்த்தும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்கை டைவர்ஸ் வானத்தில் இருந்து சாகச நிகழ்வுகளுடன் வண்ணமயமான காட்சிகளை காட்சிப்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் பெஸ்டிவல்ஸ் அண்ட் ரீட்டெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸில் (DFRE) ஈவன்ட் ப்ளானிங் அசிஸ்டன்ட் மேனேஜராக இருக்கும் கல்தம் அல் ஷம்சி கூறுகையில், “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 30 வது ஆண்டு கொண்டாட்டங்களைச் சேர்த்து, கண்கவர் பைரோ ட்ரோன்கள் டிசம்பர் 13 மற்றும் ஜனவரி 11 ஆகிய தேதிகளில் இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பைரோடெக்னிக்குகளை இணைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இன்றிரவு 8 மணிக்கு மற்றும் மீண்டும் இரவு 10 மணிக்கு சுமார் 150 பைரோ ட்ரோன்கள் ஸ்கை டைவிங் ஸ்டண்ட்டுடன் புறப்படும் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து AO மல்டிமீடியா மற்றும் ட்ரோன்களின் CEO மற்றும் தயாரிப்பாளரான மார்கோ நீடேர்மியர் பேசிய போது, Skydive Dubai உடன் இணைந்து, இரண்டு அசாதாரண நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ட்ரோன்கள் வானவேடிக்கைகளால் வானத்தை ஒளிரச் செய்யும் போது, ”ஸ்கைடைவர்கள் 10,000 அடி உயரத்தில் இருந்து சாகச நிகழ்வுகளை மேற்கொள்வார்கள். கூடுதல் விளக்குகள் மற்றும் பைரோடெக்னிக்குகளுடன் கூடிய உற்சாகமான காட்சியில் ட்ரோன்களின் முன் அவர்களின் உடைகளில் நடனமாடுவார்கள்” என்று விவரித்துள்ளார்.
தினசரி இருமுறை ட்ரோன் நிகழ்ச்சிகள்
இதற்கிடையில், டிசம்பர் 6 அன்று வழக்கமான DSF ட்ரோன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. இது ஜனவரி 12 வரை தினமும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு இரண்டு முறை நடைபெறும்.
அதுமட்டுமின்றி, ஏறத்தாழ 1,000 க்கும் மேற்பட்ட அதிநவீன ட்ரோன்கள், 4,000 க்கும் மேற்பட்ட ப்ரொப்பல்லர்களுடன் இணைந்து, துபாயின் வானத்தில் தடையற்ற காட்சி சிம்பொனியை வழங்க சிறப்பு தொழில்நுட்ப மென்பொருளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel