துபாய்: ஷேக் சையத் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மூன்று மேம்பாடுகள்!! RTAவின் புதிய முயற்சி…

துபாயில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாயின் முக்கிய சாலையான ஷேக் சையத் சாலையில் மூன்று பெரிய போக்குவரத்து மேம்பாடுகளை செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது மேம்பாட்டில், அபுதாபியின் திசையில் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட் மற்றும் அல் மனாரா ஸ்ட்ரீட் இடையில் ஒன்றிணைக்கும் தூரங்களை விரிவுபடுத்துவதுடன், அல் மனாராவை நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு கூடுதல் பாதையை அறிமுகப்படுத்துவது அடங்கும். இந்த விரிவாக்கம், இந்த திசையில் வாகனத் திறனை 30 சதவீதம் அதிகரிக்கவும், நுழைவு மற்றும் வெளியேறும் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது என்று RTAவின் போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் சாலை மற்றும் வசதிகள் பராமரிப்பு இயக்குனர் அப்துல்லா லூட்டா குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு விரிவாக்கம், ஷாங்க்ரி-லா ஹோட்டலுக்கு (Shangri-La Hotel) முன்னால் சேவை சாலையின் (service road) வெளியேறும் இடத்தில் மாற்றங்களை உள்ளடக்கியது, இது துபாய் மாலுக்கு அருகிலுள்ள ஷேக் சையத் சாலையில் ஃபர்ஸ்ட் இன்டர்சேஞ்ச்க்கு செல்கிறது.
இந்த முக்கிய இடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும், சர்வீஸ் சாலையிலிருந்து நுழைவதற்கும் அல் சஃபா ஸ்ட்ரீட் மற்றும் துபாய் மால் நோக்கி வெளியேறுவதற்கும் இடையே உள்ள இணைப்பு தூரத்தை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.
மூன்றாவது, அபுதாபியின் திசையில் அல் மராபி ஸ்ட்ரீட் மற்றும் அல் மனாரா ஸ்ட்ரீட் இடையே இணைப்பு தூரத்தை நீட்டிப்பதாகும். இந்த மேம்பாடுகள் அனைத்தும் முக்கிய இடங்களில் நெரிசலைக் குறைக்கவும், உச்ச போக்குவரத்து நேரங்களில் வாகன இயக்கத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று லூட்டா விளக்கியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel