துபாயில் இந்தியருக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!! ரேஃபிளில் 24 காரட் தங்கம் பூசப்பட்ட டெஸ்லா சைபர்டிரக்கை தட்டித் தூக்கிய வெற்றியாளர்…

துபாயில் கடந்த நவம்பர் 14 முதல் ஜனவரி 31 வரை இயங்கிய துபாய் கோல்ட் சூக் எக்ஸ்டென்சனில் ‘shop and win’ எனும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் நபருக்கு தங்க முலாம் பூசப்பட்ட டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது துபாயில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் இந்த அபார வெற்றியை பெற்றிருக்கிறார்.
துபாயில் வசிக்கும் இந்தியரான சோமஸ்வராராவ் முங்கி, 24 காரட் தங்கம் பூசப்பட்ட டெஸ்லா சைபர்டிரக்கை வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான ஃபிண்டெக் நிபுணர், இப்போது பிராந்தியத்தின் முதல் 24 காரட் தங்கம் பூசப்பட்ட டெஸ்லா சைபர்டிரக்கின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.
2021 முதல் துபாயில் வசித்து வரும் இவர், இந்த பாரிய வெற்றி குறித்து பேசுகையில், “நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இதுபோன்ற வெற்றிகள் அதிர்ஷ்டம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் நான் செய்த நல்ல செயல்களுக்கு இது ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம் என்று ஒருவர் பரிந்துரைத்தார்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
மேலும் கூறுகையில், “மற்றவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பது உண்மையிலேயே முக்கியமானது. வாழ்நாளில் ஒரு முறை இந்த சந்தர்ப்பத்திற்கு துபாய் கோல்ட் சூக் எக்ஸ்டென்சனுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு அற்புதமான ஆச்சரியம், இது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது” என்று அவரது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அதில் பங்கேற்ற கடைகளில் வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 500 திர்ஹம்ஸ்க்கும் ஒரு ரேஃபிள் டிராவிற்கான நுழைவைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel