UAE: ரமலானை முன்னிட்டு 1,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அமீரக ஜனாதிபதி உத்தரவு!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி 27, வியாழக்கிழமையன்று 1,295 கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த முன்முயற்சி புனித மாதத்தில் சிறைக் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தினருடன் செலவிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கைதிகளின் விடுதலை மட்டுமன்றி கூடுதலாக, பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் மீது விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் அபராதங்களையும் ஜனாதிபதி தள்ளுபடி செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த முடிவு அமீரகத் தலைவர்களின் நீண்டகால பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது மற்றும் ரமலான் மற்றும் ஈத் போன்ற குறிப்பிடத்தக்க மத சந்தர்ப்பங்களில் கைதிகளை விடுவிப்பது பாரம்பரியமான நடைமுறையாகும். கடந்த ஆண்டு, இதேபோன்ற நடவடிக்கையில், அமீரக ஜனாதிபதி சுமார் 735 கைதிகளை ரமலானுக்கு முன்னால் விடுவிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel