துபாய் போக்குவரத்தில் மற்றுமொரு மைல்கல்.. புதிதாக ‘ரயில் பஸ்’ திட்டத்தை வெளியிட்ட RTA..!!

துபாயில் பொது போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நவீன முயற்சிகள் அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக துபாயில் நடைபெற்று வரும் உலக அரசு உச்சிமாநாட்டில் (World Government Summit) ஒரு புதிய ‘ரயில் பஸ்’ வாகனத்தை எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ளது.
ஒரு காப்ஸ்யூல் போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த வாகனம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், ஒரு பயணத்திற்கு 40 பயணிகளை கொண்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தின் புதிய முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்த ரயில் பஸ் 11.5 மீட்டர் நீளமும் 2.65 மீட்டர் அகலமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ரயில் பஸ் ஒரு செலவு குறைந்த போக்குவரத்து முறை மற்றும் நகரம் முழுவதும் மென்மையான போக்குவரத்து ஓட்டத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து, முழு சூரிய சக்தியால் இயங்கி, தானியங்கி முறையில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் துபாயை உலகின் ஸ்மார்ட் சிட்டியாக மாறுவதற்கான லட்சியத்துடன் ஒத்துப்போகிறது மற்றும் UAE Net Zero 2050 வியூகம், துபாயின் ஜீரோ-எமிஷன் பொதுப் போக்குவரத்து உத்தி 2050 மற்றும் Dubai 2030 self driving transport strategy உள்ளிட்ட முக்கிய தேசிய உத்திகளை ஆதரிக்கிறது.
இந்த புதிய வகை பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி தற்போது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும் இது நடைமுறைக்கு வரும் போது, இந்த அமைப்பு பொது போக்குவரத்தை மாற்றியமைக்க மற்றும் ஸ்மார்ட், நிலையான இயக்கத்தில் உலகளாவிய தலைமையாக துபாயின் நற்பெயரை வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel