அமீரகத்தில் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கும் 6 முக்கிய மாற்றங்கள் மற்றும் விதிகள்…

மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முதல், பல புதிய விதிகள் மற்றும் மேம்பாடுகள் அமலுக்கு வரவிருக்கிறது. நாட்டின் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் முதல் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுக்கான புதிய கார்ப்பரேட் வரி தேவைகள் வரை முக்கிய மாற்றங்கள் இதில் அடங்கும். மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ள 6 முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1. குறைந்தபட்ச நோல் கார்டு டாப்-அப் அதிகரிப்பு:
மார்ச் 1, 2025 முதல், துபாய் மெட்ரோ டிக்கெட் இயந்திரங்களில் நோல் கார்டுக்கு டாப்-அப் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 20 திர்ஹம்ஸாக அதிகரிக்கும். இருப்பினும், ஆன்லைன் டாப்-அப்களில் குறைந்தபட்ச வரம்பு 5 திர்ஹம்ஸ் ஆக தொடர்ந்து இருக்கும்.
2. புதிய போக்குவரத்து சட்டம்:
ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் பல மாற்றங்களுடன் ஒரு புதிய போக்குவரத்து சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- சட்டப்பூர்வ ஓட்டுநர் வயது 17 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இ-பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கான புதிய விதிகள்.
- போக்குவரத்து மீறல்களுக்கு கடுமையான தண்டனைகள், அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் நியமிக்கப்படாத பகுதிகளில் சாலைகளைக் கடப்பது மற்றும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்வது (hit and run) உள்ளிட்ட சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகள்.
3. ரமலான் சாலிக் கட்டண நேரங்கள்:
ரமலான் மாதத்தில், சாலிக் டோல் கேட் கட்டணம் புதிய அட்டவணையைப் பின்பற்றும்.
- போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் (peak hours) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலிக் டோல்களை கடப்பதற்கு 6 திர்ஹம்ஸ்.
- காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நெரிசல் இல்லாத நேரங்களில் சாலிக்கை கடப்பதற்கு 4 திர்ஹம்ஸ்.
- அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை இலவசம்.
4. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கான கார்ப்பரேட் வரி பதிவு:
ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் 2024 ஆம் ஆண்டில் 1 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் வருவாய் ஈட்டியிருந்தால், மார்ச் 31, 2025 ஆம் தேதிக்குள் கார்ப்பரேட் வரிக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் செப்டம்பர் 30, 2025 ஆம் தேதிக்குள் வரி வருமானத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
5. எதிஹாட்-சாட் (Etihad-SAT) செயற்கைக்கோள் ஏவுதல்:
மார்ச் 2025 இல் ஏவப்படவுள்ள அமீரகத்தின் எதிஹாட்-சாட் செயற்கைக்கோள், அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால், உயர் துல்லியமான வானிலை கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
6. DEWA பில்லிங் சுழற்சி மாற்றங்கள்:
மார்ச் 2025 முதல், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA) சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப, இம்பீரியல் கேலன்களுக்குப் (imperial gallons) பதிலாக கன மீட்டரில் (cubic meter) நீர் பயன்பாட்டை அளவிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த செயல்பாட்டின் ஆரம்ப காலத்தில் கன மீட்டர் மற்றும் கேலன்கள் இரண்டும் பில்களில் தோன்றும் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் துபாயில் நீர் அளவீட்டு நடைமுறைகளை தரநிலையாக்குவதில் குறிப்பிடத்தக்க படியை குறிப்பதுடன், இது உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய இந்த மாற்றங்கள் இந்த மாதத்தில் அமீரகத்தில் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel