ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் அதிகாரிகள் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கும் நிலையில், ஈரானிலிருந்து நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு ட்ரோனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் அமெரிக்க-ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளது. ஈரான் நாடானது, அமீரகம் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள நாடுகளைக் குறிவைத்தோ அல்லது அச்சுறுத்தியோ வருகிறது.
இந்நிலையில் இன்று அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ட்ரோனைக் கண்டறிந்து பதிலடி கொடுத்ததை அமைச்சகம் உறுதிப்படுத்தியதுடன், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களையும் சமாளிக்க அமீரகத்தின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன என்றும் வலியுறுத்தியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டின் வான்வெளியை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்கத் தகவல்களை மட்டுமே நம்புமாறும் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்கள், வதந்திகள் அல்லது தவறான அறிக்கைகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அமைச்சகம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel