ADVERTISEMENT

துபாய் வரும் பயணிகளுக்கான விசா மற்றும் PCR குறித்த வழிமுறைகளை வெளியிட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!

Published: 31 Aug 2021, 10:13 AM |
Updated: 31 Aug 2021, 10:27 AM |
Posted By: admin

வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வர நேற்று ஆகஸ்ட் 30 முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து துபாய் வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் புதிய வழிமுறைகள் குறித்து கூறும்போது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 10 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தவிர பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) அல்லது அடையாள குடியிருப்பாளர்களுக்கான கூட்டாட்சி ஆணையம் (ICA) ஆகியவற்றின் முன் அனுமதியின்றி இப்போது துபாய்க்கு பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள 10 நாடுகளான இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, உகாண்டா, வியட்நாம் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளில் இருந்து பயணம் செய்யும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறப்பதற்கு முன் GDRFA மற்றும் ICA- வின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ட் விசா அல்லது வேலைவாய்ப்பு விசா, குறுகிய காலம் அல்லது நீண்ட கால விசா, விசிட் விசா அல்லது அரைவல் விசா போன்ற பிற விசாக்களைக் கொண்ட பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் தெரிவிக்கையில் மேற்கூறிய 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையத்தில் மாதிரி சேகரிக்கப்பட்ட நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட எதிர்மறை கோவிட் -19 PCR சோதனைச் சான்றிதழை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதனுடன் பயணம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக ஆறு மணி நேரத்திற்குள், அவர்கள் புறப்படும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு சான்றாக ஒரு QR குறியீட்டுடன் கூடிய ரேபிட் PCR சோதனை அறிக்கையையும் அளிக்க வேண்டும் என்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

எனினும், மேலே குறிப்பிட்டுள்ள இந்த 10 நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகள் தாங்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட சோதனைக்கான எதிர்மறை கோவிட் -19 RT-PCR சோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, எந்த நாட்டிலிருந்தும் துபாய்க்கு திரும்பும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு புறப்படுவதற்கு முந்தைய கோவிட் -19 PCR சோதனை தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் விமான நிலையம் வந்த பிறகு PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதே போன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மிதமான முதல் கடுமையான குறைபாடுகள் உள்ள பயணிகள் ஆகியோரும் இந்த விலக்குகளில் அடங்குவர் எனவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.