ADVERTISEMENT

டிசம்பர் 6-ல் தொடங்கும் ‘DSF 2024’.. முதன்முறையாக ‘பைரோ ட்ரோன்’ காட்சிகள் சேர்ப்பு.. எப்போது பார்க்கலாம்..??

Published: 4 Dec 2024, 9:19 AM |
Updated: 4 Dec 2024, 9:29 AM |
Posted By: Menaka

துபாய் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 30வது பதிப்பு வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை 38 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தள்ளுபடி மற்றும் ப்ரொமோஷன்களை வழங்கவிருக்கும் இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக நிர்வாகம் வானவேடிக்கை மற்றும் இரண்டு ட்ரோன் நிகழ்ச்சிகளை தினமும் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், வான வேடிக்கை மற்றும் ட்ரோன்கள் இரண்டையும் இணைக்கும் ‘Pyro drone’ (fireworks with drones) சிறப்பு நிகழ்ச்சிகள் முதன்முறையாக இடம்பெறும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வான வேடிக்கைகள் மற்றும் ட்ரோன் காட்சிகள் எந்தெந்த இடங்கள் மற்றும் தேதிகளில் நடைபெறும் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.

பைரோ ட்ரோன் ஷோக்கள் DSF இன் இரண்டாவது வார இறுதியில் இரவு வானத்தை ஒளிரச் செய்யும். சுமார் 150 பைரோ ட்ரோன்கள் ப்ளூவாட்டர்ஸ் மற்றும் தி பீச், JBR ஆகிய இடங்களின் மேல் டிசம்பர் 13 அன்று இரவு 8 மணிக்கும் இரவு 10 மணிக்கும் நிகழ்த்தப்படும். இதனையடுத்து, இரண்டாவது முறையாக 150 பைரோ-ட்ரோன் காட்சிகள் ஜனவரி 11 அன்று DSF கடைசி வார இறுதியில் பார்வையாளர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்ரோன் காட்சிகள்

DSF ட்ரோன்கள் தினமும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட் மற்றும் தி பீச், JBR ஆகிய இடங்களில் இரண்டு முறை நிகழ்ச்சிகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 1,000 ட்ரோன்களைக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு நிகழ்ச்சி இரண்டு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் 6 முதல் 26 வரை, முதல் நிகழ்ச்சி DSF இன் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இந்த டிசம்பர் 6 முதல் 12 வரை, ட்ரோன்கள் ஒரு QR குறியீட்டை உருவாக்கும், அதில் பங்கேற்பாளர்கள் தனிப்பட்ட செய்தியை அனுப்ப ஸ்கேன் செய்யலாம். ட்ரோன்கள் இந்த செய்திகளை டிசம்பர் 13 அன்று காட்சிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரண்டாவது கருப்பொருளானது, டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும், இது 2D மற்றும் 3D ட்ரோன் வடிவங்களில் சின்னச் சின்ன அடையாளங்களைக் காண்பிக்கும்.

வானவேடிக்கை மற்றும் துபாய் லைட்ஸ்

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் இரவு 9.15 மணிக்கு தினசரி வாணவேடிக்கைக் காட்சிகளை இலவசமாக அனுபவிக்கலாம். மேலும், வார இறுதி நாட்களில் இரவு 8 மணிக்கு ஹத்தாவில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு DSFஇன் 30 வது பதிப்பைக் குறிக்கும் வருடாந்திர திருவிழாவில், நகரத்தை ஒளிரச் செய்யும் விளக்குகள் துபாயின் முக்கிய பகுதிகளில் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel