ADVERTISEMENT

துபாய் மாலில் உணவகத்திற்கு சென்ற துபாய் இளவரசர்.. அனைவரின் பில்களையும் செலுத்தி ஆச்சரியப்படுத்தியதாக மக்கள் மகிழ்ச்சி!!

Published: 28 Jun 2025, 6:02 PM |
Updated: 28 Jun 2025, 6:02 PM |
Posted By: Menaka

துபாயில் கடந்த புதன்கிழமை, துபாய் மாலில் உள்ள லா மைசன் அனி (La Maison Ani) என்ற உணவகத்தில் உணவருந்தியவர்களின் பில்களை துபாயின் பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் செலுத்தியதால் அங்கு வந்த மக்கள் வியப்படைந்துள்ளனர். துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களுடன் நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் மதிய உணவிற்கு உணவகத்திற்குச் சென்றபோது இந்த ஆச்சரியமூட்டும் நிகழ்வு நடந்துள்ளது.

ADVERTISEMENT

உணவகத்தில் இருந்த விருந்தினர்களில் நூரா முகமது அல் மர்சூகி என்ற எமிராட்டி நபர், உணவகத்தில் நடந்த இந்த சம்பவத்தை விவரித்துள்ளார். அவர் கூறுகையில் “அவர்கள் மிகவும் நட்பாக இருந்தனர், அனைவருக்கும் வணக்கம் சொன்னார்கள், இந்த அனுபவத்தை எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றினார்கள், நான் எனது பில்லை கேட்டபோது, ​​ஷேக் ஹம்தான் அனைவரின் கட்டணத்தையும் செலுத்தியதாக ஊழியர்கள் கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே அரச குடும்ப உறுப்பினர்கள் மக்களுடன் நேரத்தை செலவிடுவதையும், கருணையைப் பரப்புவதையும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத தருணங்களை உருவாக்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகளில் அரச குடும்பத்தினர் உணவகத்திற்குள் நுழைந்து, சக உணவக விருந்தினர்களை அன்புடன் வரவேற்பதைக் காணலாம். புகழ்பெற்ற சமையல்காரர் இசு அனி தலைமையிலான உணவகம் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு விருந்தளித்தது, இது அங்கு இருந்த அனைவருக்கும் மறக்கமுடியாத மதிய உணவு அனுபவத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து உணவகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்த வருகையை “கௌரவம் மற்றும் பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இளவரசரின் வருகை தனிப்பட்டதாக இருந்தபோதிலும், அவர்கள் காட்டிய கருணை மற்றும் தாராள மனப்பான்மை மிகவும் பாராட்டப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel