நவம்பர் மாதத்தில் அமீரகத்தில் இருந்து தமிழகம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல்..!!
வந்தே பாரத் திட்டமானது இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீடிக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இத்திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்களுக்கான முன்பதிவினை பயணிகள் செய்து கொள்ளலாம் என்று சமீபத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. தற்பொழுது அக்டோபர் மாதத்திற்கான விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் இயக்கப்படவிருக்கும் விமான நிறுவனங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள விமானப் பட்டியலின்படி அமீரகத்தின் துபாய், அபுதாபி ஆற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் பயணிகள் தூதரகத்தில் பதிவு செய்ய தேவையின்றி நேரடியாகவே விமான டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்திற்கான டிக்கெட்டை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளத்திலோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் நினைவுபடுத்தப்படுகிறது.
துபாயில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்
அபுதாபியில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்