UAE : 7 எமிரேட்களிலும் மீண்டும் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்த முழு தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலேயே இருப்பதால் அமீரக அதிகாரிகள் வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகளையும் விதிகளையும் அறிவித்துள்ளனர். அமீரகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பொறுத்து, சமூகக் கூட்டங்கள், உணவகங்கள் அல்லது திரையரங்குகளுக்கென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த புதிய விதிமுறைகளுடன் வெளியில் செல்லும் போது பொதுமக்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிவது மற்றும் குறைந்தது இரண்டு மீட்டர் சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற அடிப்படை COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்போதும் கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளின் விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபுஜைரா
- இசை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவை நடைபெறுவதற்கு தடை
குறைக்கப்பட்ட திறன்கள்:
- பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் 70% வரை மட்டுமே அனுமதி
- ஷாப்பிங் மால்கள் 60% வரை மட்டுமே அனுமதி
- சினிமாக்கள் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி
- ஜிம்களுக்கு 50% வரை மட்டுமே அனுமதி
- ஹோட்டல்களில் இருக்கும் நீச்சல் குளங்கள் மற்றும்பொது போக்குவரத்து சேவைகளுக்கு 50% வரை மட்டுமே அனுமதி
உம் அல் குவைன்
- மால்கள் 60% திறனிலேயே இயங்க அனுமதி.
- அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- உணவகங்களில் ஒரு மேசைக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே உக்கார வேண்டும்.
- திருமணங்கள் உட்பட சமூக கூட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இருக்கக்கூடாது
- கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் திறன் 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- சினிமா அரங்குகளின் திறன் 50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா
- பொது போக்குவரத்து, சினிமாக்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் இடங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் ஜிம்கள், அத்துடன் ஹோட்டல்களில் உள்ள தனியார் கடற்கரைகள் போன்றவை 50 சதவீத திறனிலேயே இயங்க வேண்டும்
- மால்கள் மற்றும் வணிக மையங்களில் திறன் 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 மற்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
- கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்களில் திறன் 70% ஆக குறைக்கப்பட்டது.
ஷார்ஜா
- அனைத்து அரசு ஊழியர்களும் சில தனியார் துறை ஊழியர்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- ஷாப்பிங் சென்டர்கள், மால்கள் 60% திறனில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
- சினிமாக்கள், பொழுதுபோக்கு மையங்கள் பார்வையாளர்களின் திறனில் 50% மட்டுமே இருக்கும்.
- ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் 50% திறனில் இயங்க வேண்டும்.
- பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் 70% திறனிலேயே இயங்கும்
- திருமண விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் முறையே 10 மற்றும் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
- உணவகங்களில், ஒரே குடும்ப உறுப்பினர்களாக இல்லாவிட்டால், ஒரு மேசைக்கு அதிகபட்சம் 4 பேர் மட்டுமே உட்கார அனுமதி
அஜ்மான்
- அனைத்து உணவகங்களும் நள்ளிரவு 12 மணிக்குள் மூடப்படும்.
- உணவகங்கள் 50% திறனில் மட்டுமே இயங்க வேண்டும்.
- திருமண விழாக்கள் மற்றும் பிற குடும்ப நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் ஒருமுறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
அபுதாபி
- அபுதாபி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் இருந்து பணிபுரிய அனுமதி.
- திருமண விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் மற்றும் இறுதி சடங்குகளுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- பார்ட்டிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்திற்கு ஒரு முறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
- மறு அறிவிப்பு வரும் வரை சினிமாக்கள் மூடப்பட்டிருக்கும்
- மால்கள் 40 சதவீத திறனில் இயங்க வேண்டும்.
- உணவகங்கள், காபி கடைகள், ஹோட்டல்கள், பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் 60 சதவீத திறனில் இயங்கும்.
- உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் ஒவ்வொரு மேஜைக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை கடைபிடிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களை தவிர ஒரு மேசையில் நான்கு நபர்களுக்கு மட்டுமே உக்கார அனுமதி வழங்கப்பட வேண்டும்.
- ஜிம்கள், விளையாட்டு அரங்குகள், தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் 50 சதவீத திறன் வரை மட்டுமே அனுமதி
- டாக்சிகள் மற்றும் பேருந்துகள் முறையே 45 சதவீதம் மற்றும் 75 சதவீதம் திறனில் இயங்கும்
துபாய்
- ஷாப்பிங் மால்கள் 70 சதவீத திறனில் இயங்கும்.
- சினிமாக்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இடங்கள் உட்பட அமர்ந்திருக்கும் உட்புற இடங்களில் பார்வையாளர்களின் திறன் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது
- ஹோட்டல்கள் 70 சதவீத திறனில் இயங்க வேண்டும். மேலும், ஹோட்டல்களில் நீச்சல் குளங்கள் மற்றும் தனியார் கடற்கரைகளுக்குள் 70 சதவீத திறனில் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
- அதிகாலை 1 மணிக்குள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் தங்கள் வளாகத்தில் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.