வளைகுடா செய்திகள்

ஓமானில் விதிக்கப்பட்டிருந்த கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மீதான தடை மேலும் நீட்டிப்பு..!! உச்ச குழு அறிவிப்பு..!!

ஓமான் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து ஆளுநர்களிலும் கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்களை மூடுவதை மறு அறிவிப்பு வரும் வரை மேலும் நீட்டிக்க கொரோனாவிற்கான உச்சக்குழு இன்று வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு இல்லங்கள், பண்ணைகள், குளிர்காலம் மற்றும் பாலைவன முகாம்கள் மற்றும் பிற இடங்களிலான அனைத்து வகையான கூட்டங்களையும் தவிர்க்குமாறும் உச்ச குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் உச்ச குழுவால் வெளியிடப்பட்டிருந்த ஆன்லைன் அறிக்கையில், வீடுகளிலோ அல்லது பிற தனியார் இடங்களிலோ குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலக நாடுகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக கடந்த பிப்ரவரி 11, 2021 முதல் ஓமானின் அனைத்து ஆளுநர்களிலும் உள்ள கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்களை இரண்டு வார காலத்திற்கு மூட உச்சக்குழு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!