அமீரக செய்திகள்

இந்தியாவிற்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கான புதிய நெறிமுறைகள் குறித்த முழு விளக்கம்..!!

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸில் மாறுபாடு கொண்ட புதிய வகை கொரோனா வைரஸானது பல நாடுகளில் பரவி வருவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறைகள் பிப்ரவரி 22 ம் தேதி 23.59 மணி நேரம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பயணிகள் அனைவரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்திற்கு முன் தேவையான ஆவணங்கள்

  • ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் (www.newdelhiairport.in) சுய அறிவிப்பு படிவம்
  • 72 மணிநேர செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 RT -PCR சோதனை அறிக்கை.
  • அறிக்கையின் நம்பகத்தன்மையின் பிரகடனம் மற்றும் தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் குற்றவியல் வழக்குகளுக்கான பொறுப்பு.
  • அரசாங்க நெறிமுறையின்படி, 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் அல்லது சுய கண்காணிப்புக்கு கட்டுப்படுவது

PCR சோதனைக்கான விலக்குகள்

  • தங்களின் குடும்ப உறுப்பினர் இறந்தால் அதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்பவர்கள் எதிர்மறையான PCR சோதனை முடிவுக்கான தேவையைத் தவிர்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • இருப்பினும், அவர்கள் போர்டிங் செய்வதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏர் சுவிதா போர்ட்டலில் விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். இதில் வரும் முடிவே இறுதியானது.

போர்டிங் செய்வதற்கு முந்தைய பயண ஆலோசனை

  • ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து எதிர்மறை PCR சோதனை முடிவை பதிவேற்றிய பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • பயணிகள் ஏறுவதற்கு முன்பு வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • கொரோனாவிற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக்க ஆரோக்யசேது (Aarogya Setu) அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • கனெக்ட்டிங் ஃபிலைட்ஸில் (connecting flights) பயணிப்பவர்கள் தாங்கள் முதலில் இறங்கும் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற இடங்களுக்கு செல்ல விரும்பினால், இந்த விமானங்களை முன்பதிவு செய்யும்பொழுது 6-8 மணிநேர போக்குவரத்து நேரத்தை (transit time) அனுமதிக்க வேண்டும்

இந்திய விமான நிலையத்தை அடைந்ததும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்

  • பயணிகள் டிபோர்டிங் செய்யும் போது சமூக இடைவெளியை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • வெப்ப பரிசோதனையின் போது கொரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறைகளின்படி மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
  • பயணிகள் விமான நிலையத்திலிருந்து விடைபெறுவதற்கு முன் அல்லது ட்ரான்சிட் விமானங்களில் பயணிப்பதற்கு முன் PCR சோதனைக்கான மாதிரியை வழங்க வேண்டும். பயணம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் எதிர்மறை PCR சோதனை முடிவை வழங்குவதில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் விமானங்களிலிருந்து சர்வதேச வருகைக்கான விதிமுறைகள்

இந்த பகுதியில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகள் மேற்கூறியுள்ளதுடன் பின்வரும் விதிகளையும் கடைபிடிக்க வேண்டும்

  • கடந்த 14 நாட்களின் பயண வரலாற்றை சுய அறிவிப்பு வடிவத்தில் வழங்க வேண்டும். அதே போல் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் விமான நிலையத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்களா அல்லது இந்தியாவில் தங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய மேலும் விமானங்களை எடுக்க வேண்டுமா என்றும் தெரிவிக்கவும்.
  • கடந்த 14 நாட்களில் யுனைடெட் கிங்டம், பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தால் அல்லது அந்த நாடுகளின் வழியாக ட்ரான்சிட் விமானங்களில் பயணித்திருந்தால், விமான ஊழியர்களின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
  • இந்தியாவுக்கு வருவதற்கு கட்டாயமாக பயணிகளே கட்டணம் செலுத்தி உறுதிப்படுத்தும் மூலக்கூறு சோதனைக்கு (self-paid confirmatory molecular test) உட்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது ட்ரான்சிட் விமானங்கள் மூலமாகவோ இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

  • பயணிகள் வெளியேறுவதற்கு முன் நியமிக்கப்பட்ட பகுதியில் கொரோனா சோதனைக்கு ஒரு மாதிரி கொடுக்க வேண்டும்.
  • சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் ஏழு நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் மருத்துவ மையத்திற்கு புகாரளிக்க வேண்டும்.
  • நேர்மறையாக இருந்தால், அவர்கள் சுகாதார நெறிமுறையின்படி சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பாதித்த பயணிகளுடன் தொடர்பு கொண்டால்

கொரோனா பாதித்து பயணித்த பயணியுடன் ஒரே வரிசையில் பயணித்த சக பயணிகள் மற்றும் அந்த வரிசைக்கு முன்னால் மூன்று வரிசைகள் மற்றும் பின்னால் மூன்று வரிசைகளில் பயணித்தவர்கள் பின்வருவனவற்றை கடைபிடிக்க வேண்டும்.

  • பயணம் செய்தவர் இங்கிலாந்து, பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிக்கும் கொரோனா பாதித்த நபர் எனில், பயணிகள் தனி நிறுவன தனிமைப்படுத்தலுக்குச் சென்று 7 வது நாளில் சோதனை செய்ய வேண்டும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைத் தவிர வேறு நாடுகளிடமிருந்து பயணம் செய்த கொரோனா பாதித்த நபர் எனில், பயணிகள் சோதனைக்கு முன் 7 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம்.
  • சோதனையில் நேர்மறையான (வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில்) முடிவைப் பெற்ற பயணிகளுடன் சமூக தொடர்புள்ள அனைவரும் 14 நாட்களுக்கு தனித்தனி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொரோனாவிற்கான நெறிமுறையின்படி சோதிக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!