வளைகுடா செய்திகள்
வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் என ஓமான் அரசு அறிவிப்பு..!!
ஓமானில் மே 13, வியாழக்கிழமை (நாளை) ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் மற்றும் ஈத் அல்-பித்ரின் முதல் நாள் என்று ஓமானின் எண்டோமென்ட்ஸ் மற்றும் மத விவகார அமைச்சகம் (Ministry of Endowments and Religious Affairs) தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 13 ம் தேதி ஈத் அல் பித்ர் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈத் விடுமுறையானது மே 15, சனிக்கிழமை வரை இருக்கும் என்றும் மே 16 முதல் பணிக்கு மீண்டும் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.