அமீரக செய்திகள்

அபுதாபி அல் ஜாஹியா பகுதியில் தீ விபத்து.. அணைக்கும் முயற்சியில் பாதுகாப்புக் குழுக்கள் தீவிரம்..!

அபுதாபியின் அல் ஜாஹியா பகுதியில் வெள்ளிக்கிழமையான இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து அபுதாபி காவல்துறை ட்விட்டரில், அல் ஜாஹியா பகுதியில் இன்று ஏற்பட்ட தீயை காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தீயை அணைக்க பல குடிமைத் தற்காப்பு இயந்திரங்கள் களத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம், அபுதாபி கலிதியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 120 பேர் காயமடைந்ததாகவும், 2 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!