அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

திருச்சியில் இருந்து அதிகரிக்கும் விமான சேவைகள்.. துபாய், ஷார்ஜாவுக்கு எத்தனை விமான சேவைகள் தெரியுமா..?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வாரத்திற்கு 82 பன்னாட்டு விமான போக்குவரத்து சேவைகள் துவங்க உள்ளதாக விமான நிலையத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு 20 விமானங்களும், மலேசியாவிற்கு 28 விமானங்களும், சிங்கப்பூருக்கு 21 விமானங்களும் போக்குவரத்தில் உள்ளன.

இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 30 சேவைகளையும், இண்டிகோ 17 சேவைகளையும், ஏர் ஆசியா 14 விமானங்களும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் மற்றும் மலிண்டோ ஆகிய விமான நிறுவனங்கள் 7 விமானங்களை இயக்கி வருகின்றது.

கொரோனா தொற்றுக்கு முன்பு வாரத்திற்கு 72 விமானங்களை மட்டுமே இயக்கிய திருச்சி விமான நிலையம் தற்போது வாரத்திற்கு 82 விமானங்களை இயக்கி வருகின்றது. அதுமட்டுமின்றி விரைவில் தோகா, குவைத், மலேசியா ஆகிய நகரங்களுக்கும் திருச்சியில் இருந்து  விமான போக்குவரத்துகள் துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!