அமீரக செய்திகள்

UAE: மஹ்சூஸ் டிராவில் தமிழருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தல்..!

துபாயின் 80 வது மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தியுள்ளார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரா என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 2021 முதல் மஹ்சூஸ் டிராக்களில் பங்கேற்று வருகிறார்.

தொடர்ந்து மஹ்ஜூஸ் டிராவில் பங்கேற்று வரும் இவர் சமீபத்தில் நடைபெற்ற 80வது டிராவில் வெற்றிபெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “நான் வெற்றிபெற்றதை என்னால் நம்ப முடியவில்லை, வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தருணத்தில் மஹ்சூஸ் குழுவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், வெற்றிபெற்ற இந்த தொகையில் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும், சிறந்த வாழ்க்கையை அமைத்துத்தரவும் விரும்புகிறேன்” என்றார் வீரா.

அதுபோன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் என்பவரும் 80 வது மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று வெற்றிபெற்றுள்ளார்.  துபாயில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் ஷியாம், ஏழு ஆண்டுகளாக அமீரகத்தில் வசித்து வருகிறார். வென்றது குறித்து கூறிய ஷியாம், நான் வெற்றிபெற்றுவிட்டதாக எனது நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவிக்கையில், தான் சிலிர்த்துப் போய்விட்டதாகவும், வென்ற பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று யோசித்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!