அமீரக செய்திகள்

UAE: ஆன்லைனில் போதைப் பொருட்கள் விற்பனை.. கண்காணிப்பில் சட்ட அமலாக்கத்துறை..!

அமீரகத்தில் ஆன்லைனில் போதைப் பொருளை வாங்கினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர, வாங்குபவர்கள் வங்கி நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

முதல் முறை தவறிழைத்த குற்றவாளிகளுக்குச் தண்டனை கொடுப்பதற்கு பதிலாக சீர்திருத்தம் வழங்க கவனம் செலுத்தும் வகையில் சட்டம் இருந்தாலும், ஆன்லைனில் போதை பொருள் வாங்கி தண்டனை பெற்றவர்கள் தாங்களாகவோ அல்லது பிறர் மூலமாகவோ மற்றவர்களுக்குப் பணத்தை மாற்றவும் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அமீரகத்தின் சட்ட வல்லுநர்கள் விளக்கினர்.

துபாய் முதல்நிலை நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கில், போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கிய ஒருவருக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. போதைப்பொருள் உட்கொள்வதற்காக யாரேனும் ஒருவர் தாமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ பணத்தை மாற்றினால் சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டத்தின் 64வது பிரிவு கூறுகிறது.

“ஆன்லைனில் போதைப் பொருள்களைப் பெறுவது எளிதான வழி என சிலர் கருதுகின்றனர். போலீசார் தங்களைப் பிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றனர்.  ஆனால் சட்ட அமலாக்கத்துறை சிறப்பாக செயல்பட்டு கண்டறிந்து விடும். சட்டப்பிரிவு 74 குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, நிதி பரிவர்த்தனை கட்டுபாட்டு விதிப்பதோடு மட்டுமல்லாமல், சிறை தண்டனை மற்றும் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் ஆகிவையும் உண்டு. மேலும் ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கும் குற்றவாளிகள் வங்கி நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சட்டத்தின் பிரிவு 74-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று சட்ட வல்லுநர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!